ADDED : அக் 06, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்; திருப்பூர் மாவட்டம், வசிவரம்புதுாரை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 50. திருப்பூரில் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கடை வியாபாரம் செய்து வருகிறார். அதற்காக பல ஊர்களுக்கு சென்று பழைய பொருட்களை வாங்கி வருவது வழக்கம். நேற்று காலை காங்கயம் - கரூர் ரோட்டில் முத்துார் பிரிவு அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கோவையில் இருந்து காங்கயம் வழியாக கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோதியது. பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.