sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பயிர் விளைச்சல் போட்டி : விண்ணப்பிக்க அழைப்பு

/

பயிர் விளைச்சல் போட்டி : விண்ணப்பிக்க அழைப்பு

பயிர் விளைச்சல் போட்டி : விண்ணப்பிக்க அழைப்பு

பயிர் விளைச்சல் போட்டி : விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : நவ 07, 2025 11:04 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: நெல் பயிரிடும் விவசாயிகளை ஊக் குவிக்க தமிழக அரசு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, எம்.ஜி.ஆர். விருதுகள் வழங்கப்படுகிறது.

திருத்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடித்து மாநிலத்தில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, சிறப்பு பரிசாக ரூபாய் 5 லட்சம், 7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும்.

போட்டியில் பங்குபெறும் விவசாயி, குறைந்தபட்சம், 2 ஏக்கர் பரப்பளவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும்.

நில உரிமைதாரர், குத்தகைதாரர்களும் கலந்து கொள்ளலாம். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டும் பயிர் செய்ய வேண்டும். உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வட்டார வேளாண்மை உதவி இயக்குனரிடம் அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us