sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கற்றல், கற்பித்தல் காணொளி உருவாக்க பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு

/

கற்றல், கற்பித்தல் காணொளி உருவாக்க பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு

கற்றல், கற்பித்தல் காணொளி உருவாக்க பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு

கற்றல், கற்பித்தல் காணொளி உருவாக்க பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு


ADDED : டிச 28, 2024 06:38 AM

Google News

ADDED : டிச 28, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் அரசு, அரசு உதவிபெறுவது மற்றும் தனியார் பள்ளிகளில், கற்றல், கற்பித்தல் மற்றும் மாணவர்களுக்கான காணொளி உருவாக்குவதில் ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாடப்பகுதிகளில் சிக்கலான தலைப்புகளை எளிமையாகவும், சுவாரசியமாகவும், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், விளக்கும் திறன் கொண்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பாக, கேமராவின் முன் காணொளி நிகழ்த்துவதில் முன் அனுபவம் இருப்பது கூடுதல் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொள்ளும் ஆர்வமும், அதனை கற்றல், கற்பித்தலில் செயல்படுத்தும் திறனும் உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம், என, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விருப்பமுள்ள ஆசிரியர்கள் சிறிய புதுமையான, கற்றல், கற்பித்தல் வீடியோக்களை அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கூறுகையில், 'தற்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்கள், ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்த கல்வியாண்டில், இணையம் வாயிலாக பாடங்களுக்கு காணொளியில் மாணவர்களுக்கு எளிமையான விளக்கம் அளிப்பதற்கு இவ்வாறு தயாரிக்கப்படுகிறது.

கல்வி தொலைகாட்சியிலும் இந்த காணொளிகள் ஒளிப்பரப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us