sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அத்திக்கடவு திட்ட 2ம் பகுதி பணிகளை துவக்க பிரசாரம் 

/

அத்திக்கடவு திட்ட 2ம் பகுதி பணிகளை துவக்க பிரசாரம் 

அத்திக்கடவு திட்ட 2ம் பகுதி பணிகளை துவக்க பிரசாரம் 

அத்திக்கடவு திட்ட 2ம் பகுதி பணிகளை துவக்க பிரசாரம் 


ADDED : மார் 25, 2025 06:57 AM

Google News

ADDED : மார் 25, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம் மற்றும் அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டத்தின் இரண்டாம் பகுதி பணிகளை துவக்க வலியுறுத்தி, அரசின் கவனம் ஈர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்குள் சென்று, வீணாக அரபிக்கடலில் கலக்கும் நீரை, பவானி ஆற்றுக்கு கொண்டு வரும் நோக்கில், பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

அதோடு, 'அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தில் விடுபட்ட, 1,400க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளை திட்டத்தில் இணைக்க வேண்டும்' என்ற கோரிக்கையையும் எழுப்பி வருகின்றனர்.

இக்கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நோக்கிலும், இந்த திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், பாண்டியாறு -மாயாறு இணைப்பு திட்ட பூர்வாங்க பாசன சபை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய அனைத்து விவசாய சங்கத்தினரின் ஆதரவுடன், வரும், 30ம் தேதி, நம்பியூரில் துவங்கி, சேவூர் வழியாக அவிநாசி வரை வாகன பிரசாரம் நடத்த திட்டமிட்டு, அதற்கான ஆயத்தக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us