ADDED : டிச 20, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழகத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
'கோழிகளுக்கு ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்புக்கு, தடுப்பூசி வழியாக செலுத்தி வந்த மருந்துகள், தற்போது வாய்வழியாக கொடுக்க முடியும். சரியான நேரத்தில் தடுப்பு மருந்து கொடுத்தால், கோழிகளுக்கு வரும் நோயை தடுக்க முடியும். அதற்கான வழிமுறைகள், மருந்துகள் கால்நடை பல்கலையில் உள்ளது. கால்நடை, கோழி வளர்ப்பாளர்கள் நேரில் வந்து விபரம் அறியலாம்'' என அறிவுறுத்தப்பட்டது. கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பல்கலை தலைவர் மதிவாணன், உதவி பேராசிரியர் தேவி ஸ்ரீ ஆகியோர் விளக்கம் அளித்தனர்.