sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிக்கண்ணா மாணவர்கள் மலையேற்றத்தில் அசத்தல்

/

சிக்கண்ணா மாணவர்கள் மலையேற்றத்தில் அசத்தல்

சிக்கண்ணா மாணவர்கள் மலையேற்றத்தில் அசத்தல்

சிக்கண்ணா மாணவர்கள் மலையேற்றத்தில் அசத்தல்


ADDED : ஜூலை 21, 2025 11:51 PM

Google News

ADDED : ஜூலை 21, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; என்.சி.சி., சார்பில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில், சிறப்பு சாகச மலையேற்றப்பயிற்சி முகாம் நடந்தது.

மாணவர் பிரிவில், நாடு முழுக்க இருந்து, 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், திருப்பூர் சிக்கண்ணா கலை கல்லுாரியில், பொருளியல், 3ம் ஆண்டு படித்து வரும், என்.சி.சி., மாணவர் கார்த்திக்சரண் பங்கேற்றார்.

இப்பயிற்சியின் வாயிலாக ஏழு மலைகளை ஏறியுள்ளார். அதிகபட்சம், 7,600 அடி வரை ஏறி, தனது திறமையை காண்பித்துள்ளார்.

அதே போன்று, இமாச்சல பிரதேசம், மணாலியில் நடந்த அடிப்படை மலையேறும் பயிற்சி முகாமில், நாடு முழுக்க இருந்து, 100 மாணவியர் பங்கேற்றனர்.

இதில், கல்லுாரி, விலங்கியல் துறை மூன்றாமாண்டு, என்.சி.சி., மாணவி பவித்ரா பங்கேற்று, 14 மலைகள் ஏறியுள்ளார். அதிகபட்சம், 16 ஆயிரத்து 700 அடி வரை ஏறி, அசத்தியுள்ளார்.

மலையேற்றத்தில் சாகசம் புரிந்து திரும்பிய மாணவ, மாணவியரை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.சி.சி., அதிகாரி மேஜர் கனகராஜ், கல்லுாரி பேராசிரியர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us