sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குழந்தை தொழிலாளர் இல்லாத ஊராட்சிகள் * தொழிலாளர் துறை விழிப்புணர்வு

/

குழந்தை தொழிலாளர் இல்லாத ஊராட்சிகள் * தொழிலாளர் துறை விழிப்புணர்வு

குழந்தை தொழிலாளர் இல்லாத ஊராட்சிகள் * தொழிலாளர் துறை விழிப்புணர்வு

குழந்தை தொழிலாளர் இல்லாத ஊராட்சிகள் * தொழிலாளர் துறை விழிப்புணர்வு


ADDED : ஜன 28, 2025 06:16 AM

Google News

ADDED : ஜன 28, 2025 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 63 ஊராட்சிகள், குழந்தை தொழிலாளர் இல்லாத ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்ட தொழிலாளர்துறை சார்பில், குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை முறை ஒழித்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த கிராம சபா கூட்டங்களில், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருப்பூர் மாவட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களில் தேர்வாகியுள்ள, 63 கிராம ஊராட்சிகள், குழந்தை தொழிலாளர் இல்லாத ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கணபதிபாளையம், அலங்கியம், விருமாண்டம்பாயைம், சங்கரண்டாம்பாளையம் உட்பட 39 ஊராட்சிகளில் நடந்த கிராம சபா கூட்டங்களில், தொழிலாளர் துறை அலுவலர்கள் பங்கேற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊராட்சி தொடர்பான பணிகளை ஒப்பந்தம் செய்யும் போது, 'குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை' என, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சுயசான்று பெற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us