sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சித்ராதேவி ஜாமின் மனு இன்று விசாரணை

/

சித்ராதேவி ஜாமின் மனு இன்று விசாரணை

சித்ராதேவி ஜாமின் மனு இன்று விசாரணை

சித்ராதேவி ஜாமின் மனு இன்று விசாரணை


ADDED : ஜூலை 08, 2025 11:51 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாமியார் சித்ராதேவி ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

அவிநாசியை சேர்ந்த இளம்பெண் ரிதன்யா, 27, என்பவர் புகுந்த வீட்டு கொடுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரும் அதன் பின்னர் மாமியார் சித்ராதேவியும் கைது செய்யப்பட்டனர்.

கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமின் மனுக்கள் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அவர்கள் தரப்பில் வக்கீல்கள் சின்னசாமி மற்றும் சண்முகானந்தம் ஆகியோர் ஆஜராகினர்.

இதில், ரிதன்யாவின் தந்தை தரப்பில், வக்கீல்கள் சுப்ரமணியம், மோகன்குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். இரு தரப்பு மனுக்களையும் விசாரித்த நீதிபதி குணசேகரன், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

கவின்குமார் தரப்பு வக்கீல்கள் கூறுகையில், 'முதல் கட்ட ஜாமின் மனு தள்ளுபடி ஆகிவிட்டது. சட்ட விதிகளின் படி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து அதற்கேற்ப முடிவு செய்யப்படும்,' என்றனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சித்ராதேவிக்கு ஜாமின் கேட்டு, வக்கீல்கள் சின்னசாமி மற்றும் சண்முகானந்தம் ஆகியோர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு அளித்தனர். இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இன்று (9ம் தேதி) விசாரணைக்கு வரவுள்ளது.






      Dinamalar
      Follow us