sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துாய்மைப் பணியாளர் பணிக்கு திரும்பினர்

/

துாய்மைப் பணியாளர் பணிக்கு திரும்பினர்

துாய்மைப் பணியாளர் பணிக்கு திரும்பினர்

துாய்மைப் பணியாளர் பணிக்கு திரும்பினர்


ADDED : ஜூலை 04, 2025 12:39 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக துாய்மைப்பணியாளர்களுக்கு கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனத்தினர், அரசு நிர்ணயித்த குறைந்தபட்சம் சம்பளம் கூட வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இப்பிரச்னை குறித்து, திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் தொடர்ந்த வழக்கில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து, அதனை வழங்க உத்தரவிடப்பட்டது. இருப்பினும், சம்பளம் வழங்க உள்ளாட்சி நிர்வாகங்கள் முன்வரவில்லை.

இதனால், கடந்த மூன்று நாட்களாக துாய்மைப் பணியாளர்கள், கலெக்டர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளின் நடத்திய பேச்சுவார்த்தையில், காத்திருப்பு போராட்டம் திரும்ப பெறப்பட்டு, நேற்று முதல், துாய்மைப் பணியாளர்கள் பணிக்கு சென்றனர்.

தொழிற்சங்கத்தினர் கூறுகையில், 'ஊராட்சி, பேரூராட்சி அளவில், துாய்மைப்பணி தனியார் மயமாக்கப்படாத நிலையில், அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படுகிறது என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நகராட்சி, மாநகராட்சிகளை பொறுத்தவரை, இவ்விவகாரத்தை, அரசின் கவனத்துக் எடுத்துச் சென்று, இம்மாத இறுதிக்குள் சுமூக முடிவெடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளிக்கப்பட்டதால், போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது,' என்றனர்.






      Dinamalar
      Follow us