sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சந்தையில் துாய்மை பணி  

/

என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சந்தையில் துாய்மை பணி  

என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சந்தையில் துாய்மை பணி  

என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சந்தையில் துாய்மை பணி  


ADDED : செப் 29, 2024 02:06 AM

Google News

ADDED : செப் 29, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் அரசுக் கல்லுாரி மாணவ, மாணவியர் துய்மை பணி மேற்கொண்டனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில், தூய்மையே சேவை என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 மாணவர் சார்பில், திருப்பூர், பல்லடம் ரோடு, தெற்கு உழவர் சந்தையில், மாநகராட்சி சுகாதாரத் துறையினருடன் இணைந்து துாய்மைப்பணி மேற்கொண்டனர்.

மாணவ, மாணவியர் இரு குழுக்களாக பிரிந்து, மாநகராட்சி துப்புரவு ஊழியர்களுடன் இணைந்து காய்கறி கழிவுகளை அகற்றினர். அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பங்கேற்ற மாணவ, மாணவியர் திடக்கழிவு மேலாண்மை நிலையத்தை பார்வையிட்டனர்.

மாணவ செயலர்கள் கிருஷ்ணமுர்த்தி, மதுகார்த்திக், செர்லின், நவீன் குமார், தீபன்சந்தோஷ், தனுஜா தலைமையில் மாணவ, மாணவியர் துாய்மை உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். சுகாதார ஆய்வாளர் சின்னதுரை ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us