/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை இந்தியா முகாம் மாணவர்கள் உறுதிமொழி
/
துாய்மை இந்தியா முகாம் மாணவர்கள் உறுதிமொழி
ADDED : செப் 27, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை அரசு கலைக்கல்லுாரி நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில், துாய்மை இந்தியா சிறப்பு முகாம் நடந்தது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 'துாய்மையே சேவை' என்ற தலைப்பில் நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமையில், கல்லுாரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் ரேவதி, குமரவடிவேல் முன்னிலையில் மாணவர்கள், பேராசிரியர்கள் துாய்மை இந்தியா உறுதிமொழி எடுத்தனர்.
மாணவர்களுக்கு சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்துவதில் அவர்களின் பங்கு குறித்து, பேராசிரியர்கள் விளக்கமளித்தனர்.