sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒழுங்கு முறை கூடத்தில் தேங்காய் ஏலம்

/

ஒழுங்கு முறை கூடத்தில் தேங்காய் ஏலம்

ஒழுங்கு முறை கூடத்தில் தேங்காய் ஏலம்

ஒழுங்கு முறை கூடத்தில் தேங்காய் ஏலம்


ADDED : அக் 14, 2025 09:17 PM

Google News

ADDED : அக் 14, 2025 09:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; மடத்துக்குளத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோ ரூ. 71க்கு விற்பனையானது.

மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.

நேற்று நடந்த ஏலத்திற்கு, 5,051.450 கிலோ எடையுள்ள, 9,207 தேங்காய்களை, 24 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

ஏழு விவசாயிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக, ரூ.71க்கும், குறைந்த பட்சமாக, ரூ.63.50 என சராசரியாக, ரூ.66க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ரூ. 3 லட்சத்து, 34 ஆயிரத்து, 141 ஆகும். அதே போல், தேங்காய் பருப்பு ஏலத்திற்கு, 13 விவசாயிகள், 13 மூட்டை அளவுள்ள, 173.45 கிலோ கொப்பரை கொண்டு வந்திருந்தனர்.

இதில், ஏழு வியாபாரிகள் பங்கேற்று, தரத்திற்கு ஏற்ப, அதிக பட்சமாக, கிலோ ரூ. 208க்கும், குறைந்த பட்ச விலையாக, ரூ.180 என, சராசரியாக, ரூ.185க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 33 ஆயிரத்து, 61 என ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us