/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சூழலியல் பாதுகாப்பில் கல்லுாரி மாணவியர்
/
சூழலியல் பாதுகாப்பில் கல்லுாரி மாணவியர்
ADDED : அக் 18, 2025 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், குமரன் மகளிர் கல்லுாரியில், சூழலியல் பாதுகாப்பின் ஒரு அங்கமான பனை விதை சேகரிப்பு மற்றும் நடவுப்பணி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
தமிழக அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, கல்லுாரி நிர்வாக இயக்குனர் நிர்மல்ராஜ், தலைமை வகித்தார். பனை மரத்தின் நன்மைகள் குறித்து, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. மாணவியர் சேகரித்து வந்த பனை விதைகள், நடப்பட்டன. இதற்கான ஒருங்கிணைப்பை கல்லுாரி என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.