sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வழிதடத்தை ஆக்கிரமிக்கும் வணிக வளாகங்கள்: நடவடிக்கை தேவை

/

வழிதடத்தை ஆக்கிரமிக்கும் வணிக வளாகங்கள்: நடவடிக்கை தேவை

வழிதடத்தை ஆக்கிரமிக்கும் வணிக வளாகங்கள்: நடவடிக்கை தேவை

வழிதடத்தை ஆக்கிரமிக்கும் வணிக வளாகங்கள்: நடவடிக்கை தேவை


ADDED : ஜன 24, 2025 10:14 PM

Google News

ADDED : ஜன 24, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை நகரில், பசுபதி வீதி, சீனிவாசா வீதி, வ.உ.சி., வீதி, கல்பனா ரோடு, ராஜேந்திரா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன. அத்தியாவசிய பொருட்கள், ஆடை, உட்பட பல்வேறு வணிக பொருட்கள் விற்பனை நடக்கிறது.

இந்த பகுதிகள், நகரின் மையப்பகுதியில் இருப்பதால், பிரதானமான வழித்தடமாகவும் உள்ளன. நாள்தோறும், ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் அப்பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.

இங்கு, கடைகள் வைத்திருப்போர் பலரும், ரோட்டை ஆக்கிரமிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு ரோட்டோரத்தில் விடப்பட்டுள்ள இடைவெளியை, பல வணிக கடைகளில், பொருட்களை வைத்துக்கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.

இதனால், வாகன ஓட்டுநர்கள் ரோட்டை மறித்து வாகனங்களை நிறுத்திச்செல்கின்றனர். பசுபதி வீதியில், இன்னும் கூடுதலாக, ரோடு வரை பொருட்களை அடுக்கி, ஆக்கிரமித்துக்கொள்வதால், சரக்கு வாகனங்கள் அல்லது கார் போன்ற வாகனங்கள் எதிரெதிரே வரும் போது ஒதுங்கி செல்ல வழியில்லாமல், நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நகராட்சி நிர்வாகத்தினர் இதுகுறித்து, இந்த பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும். பொருட்களை வைத்தும், வாகனங்களை நிறுத்தியும் ரோட்டை ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us