sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாலை அமைக்க உறுதி; உண்ணாவிரதம் வாபஸ்

/

சாலை அமைக்க உறுதி; உண்ணாவிரதம் வாபஸ்

சாலை அமைக்க உறுதி; உண்ணாவிரதம் வாபஸ்

சாலை அமைக்க உறுதி; உண்ணாவிரதம் வாபஸ்


ADDED : டிச 23, 2024 11:42 PM

Google News

ADDED : டிச 23, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்; திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி, 1வது வார்டு ஸ்ரீனிவாசா நகரில் உள்ள மூன்று வீதிகளில், ரோடு மற்றும் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் அப்பகுதி குடியிருப்போர் நல சங்கம் சார்பில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1.05 லட்சம் ரூபாய் ஊராட்சியில் செலுத்தப்பட்டது.

இரண்டு வீதிகளில் ரோடு அமைக்கப்பட்டது. ஒரு வீதியில் போடப்படவில்லை. விடுபட்ட வீதியில் ரோடு போடுவது குறித்து, ஊராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து குடியிருப்போர் நல சங்கத்தினர் ஊராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

குடியிருப்போர் நல சங்கத்தினர், நேற்று காலை கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன் கூடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊராட்சி தலைவர் சண்முகசுந்தரம், துணை தலைவர் வீரக்குமார் ஆகியோர் பொதுமக்களை அழைத்து, ஒரு மாதத்திற்குள் முதல் கட்டமாக சாக்கடை கால்வாய் கட்டி தருவதாகவும், அதை தொடர்ந்து மூன்று மாதத்தில் ரோடு அமைத்து தருவதாகவும் உறுதி கூறினர். அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us