/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரிக்கு சேர்கள் வழங்க உறுதி
/
கல்லுாரிக்கு சேர்கள் வழங்க உறுதி
ADDED : ஏப் 07, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் பேரவை நிறைவு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங் கேற்ற எம்.எல்.ஏ., செல்வராஜ், கல்லுாரிக்கு, 500 சேர்கள் வழங்குவதாக உறுதியளித்தார். 2025-26ம் ஆண்டுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு பதவிஏற்பு நடந்தது.

