நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், ; மின் கட்டண உயர்வால், தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டன. மின்நுகர்வோர் கூட்டமைப்பு பல கட்ட போராட்டம் நடத்தியும், முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.
இகுகுறித்து தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு தலைவர் முத்திரத்தினம் கூறுகையில், ''தொழில்துறைகள் பல்வேறு சவால்களுக்கு ஆட்பட்டுள்ளன.
பல்வேறு வரியினங்கள் உயர்த்தப்பட்ட பின்னரும், கடன் அதிகமாக இருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், தொழில்துறையினர் மீது வரிகள் மேலும் பாயும். எனவே, தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் இயக்கம் நடத்த தயாராகி வருகிறோம்,'' என்றார்.