/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர் பயிற்சி மையம் காங்கிரஸ் எதிர்பார்ப்பு
/
தொழிலாளர் பயிற்சி மையம் காங்கிரஸ் எதிர்பார்ப்பு
ADDED : மார் 22, 2026 09:57 PM

திருப்பூர்:காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க வசதியாக, மாவட்டம் வாரியாக, பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாநகர் மாவட்ட காங். அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட தலைவர் கிட்டுசாமி, வடக்கு மாவட்ட தலைவர் செல்வக்குமார் முன்னிலை வகித்தனர்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர் கண்ணன், நேற்று நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம், கருத்துக்கேட்டார். மாவட்ட தலைவர் கோபால்சாமி தலைமை வகித்து பேசுகையில்,''திருப்பூருக்கு, போதிய சரக்கு போக்குவரத்து மற்றும் அடிப்படை ரோடு வசதிகளை மேம்படுத்த வேண்டும். தொழிலாளர் பாதுகாப்பாக தங்கியிருக்க ஏதுவாக, ஆண்கள் மற்றும் பெண் தொழிலாளருக்கான, அடுக்குமாடி வாடகை குடியிருப்பு கட்ட வேண்டும். பின்னலாடை ஏற்றுமதி மேம்பட ஏதுவாக, திருப்பூரில் நிரந்தர தொழிலாளர் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்,'' என்றார்.
*
திருப்பூரில், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

