ADDED : ஏப் 16, 2025 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; நேஷனல் ஹெரால்டு வழக்கில், பழிவாங்கும் நோக்கத்துடன் காங்., கட்சித் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் மீது, அமலாக்கத்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறி, பல்லடம், கொசவம்பாளையம் ரோட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நகரத் தலைவர் ஈஸ்வர மூர்த்தி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பங்கேற்றனர்.