sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொடரும் பருவ மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

/

தொடரும் பருவ மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

தொடரும் பருவ மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

தொடரும் பருவ மழை; விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : நவ 18, 2024 10:32 PM

Google News

ADDED : நவ 18, 2024 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை ; திருப்பூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்வதால், விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. நேற்றுமுன்தினம் காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் சராசரியாக 10.92 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக, அமராவதி அணையில், 66 மி.மீ., க்கு கன மழை பெய்துள்ளது. நல்லதங்காள் ஓடையில், 25 மி.மீ.,க்கு மிதமான மழையும்; மடத்துக்குளத்தில், 15 மி.மீ., - கலெக்டர் முகாம் அலுவலக சுற்றுப்பகுதிகளில் 14.40; தாராபுரத்தில், 11.

திருமூர்த்தி அணையில், 10; கலெக்டர் அலுவலக பகுதிகளில், 9; காங்கயத்தில், 9; திருமூர்த்தி அணை (ஐ.பி.,) 8; திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக பகுதிகளில் 7; பல்லடத்தில், 7; உப்பாறு அணையில், 6; வட்டமலைக்கரை ஓடையில், 5.60; ஊத்துக்குளியில் 5.20; குண்டடத்தில் 5.

உடுமலையில், 4.20; அவிநாசியில், 4;மூலனுாரில், 3; வெள்ள கோவிலில், 3; திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதிகளில் 1 மி.மீ.,க்கு லேசான மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில், கடந்த அக்., 1ம் தேதி வடகிழக்கு பருவமழை பெய்தது. தீபாவளி வரை தொடர்ந்து பெய்த மழை, பண்டிகைக்குப்பின் பத்து நாட்களுக்கு மேல் ஓய்வெடுத்தது. இந்நிலையில், இம்மாதம் 13ம் தேதி முதல் அடுத்தடுத்த நாட்கள், மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தொடர்மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us