/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 130க்கு விற்பனை
/
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 130க்கு விற்பனை
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 130க்கு விற்பனை
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 130க்கு விற்பனை
ADDED : நவ 29, 2024 12:14 AM

உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ் நேற்று நடந்த ஏலத்தில், ஒரு கிலோ ரூ.130க்கு விற்பனையானது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஏலத்திற்கு, உடுமலை, விளாமரத்துப்பட்டி, கோட்டமங்கலம், பூளவாடி, சின்ன வீரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 19 விவசாயிகள், 143 மூட்டை அளவுள்ள, 7 ஆயிரத்து, 150 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இத்திட்டத்தின் கீழ் நடந்த மறைமுக ஏலத்தில், 12 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தரம், ரூ.125.69 முதல், ரூ.130 வரையும், இரண்டாம் தரம், ரூ.102.26 முதல், 116.99 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.
ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
இங்கு, கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
கொப்பரையை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
நேற்று நடந்த ஏலத்திற்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால், வாரம்தோறும் கொப்பரை வரத்து அதிகரித்து வருகிறது. இ - நாம் திட்டத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை, உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்தார்.