ADDED : ஏப் 25, 2025 11:27 PM

உடுமலை: உடுமலையில், இ - நாம் திட்டத்தின் கீழ் நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில், அதிகப்பட்சமாக ஒரு கிலோ ரூ.184.10 க்கு விற்பனையானது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்றுமுன்தினம் நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, சின்னவீரம்பட்டி, கப்பளாங்கரை, ராவணாபுரம், பொன்னேரி, சீலக்காம்பட்டி, குறிஞ்சேரி, புக்குளம், நல்லிகவுண்டம்பாளையம், கொடிங்கியம், பொள்ளாச்சி, மானுப்பட்டி, புங்கமுத்துார், குமரலிங்கம், காளியாபுரம், தென்குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 24 விவசாயிகள்,137 மூட்டை அளவுள்ள, 6 ஆயிரத்து, 850 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ-நாம் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த மறைமுக ஏலத்தில், 9 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தரம், ரூ.170.66 முதல், ரூ.184.10 வரையும், இரண்டாம் தரம், ரூ.122 முதல், 164 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது என, திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தனர்.