sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இ-நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.143.99க்கு விற்பனை

/

இ-நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.143.99க்கு விற்பனை

இ-நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.143.99க்கு விற்பனை

இ-நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.143.99க்கு விற்பனை


ADDED : டிச 26, 2024 10:29 PM

Google News

ADDED : டிச 26, 2024 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை ; உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் நேற்று நடந்த ஏலத்தில், கொப்பரை கிலோ, 143.99 ரூபாய்க்கு விற்பனையானது.

உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று முன்தினம் நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, விளாமரத்துப்பட்டி, நல்லி கவுண்டம்பாளையம், சீலக்காம்பட்டி, கோட்டமங்கலம், கோவை, பூளவாடி, போடிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 15 விவசாயிகள், 79 மூட்டை அளவுள்ள, 3,950 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இ-நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 8 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.

முதல் தர கொப்பரை, 132.96 முதல், 143.99 ரூபாய் வரையும்; இரண்டாம் தர கொப்பரை, 109.96 முதல், 126.96 ரூபாய் வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.

ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:

உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.இங்கு, கொப்பரை தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

நேற்று நடந்த ஏலத்திற்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வாரந்தோறும் கொப்பரை வரத்து அதிகரித்து வருகிறது.

இ-நாம் திட்டத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us