sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இ- நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 145 க்கு விற்பனை

/

இ- நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 145 க்கு விற்பனை

இ- நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 145 க்கு விற்பனை

இ- நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ. 145 க்கு விற்பனை


ADDED : பிப் 13, 2025 10:06 PM

Google News

ADDED : பிப் 13, 2025 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் நேற்று நடந்த ஏலத்தில், ஒரு கிலோ ரூ.145 க்கு விற்பனையானது.

உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, 16 விவசாயிகள், 60 மூட்டை அளவுள்ள, 3 ஆயிரம் கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இ-நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 6 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.

முதல் தரம், ரூ. 135 முதல், ரூ. 145 வரையும், இரண்டாம் தரம், ரூ. 105.10 முதல், 135 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.

அதே போல், ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த, இரண்டு விவசாயிகளின்,395 மூட்டை அளவுள்ள, 19,750 கிலோ தேங்காய் பருப்பு, இ-நாம் திட்டத்தின் கீழ் ஏலம் விடப்பட்டது.

திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:

உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us