/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
/
திருப்பூரில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : நவ 19, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; வக்கீல்கள் மீதான தாக்குதல்களுக்கு தீர்வு காணும் விதமாக, வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்; மத்திய அரசு புதிய சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, தமிழகத்தில் நேற்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்திலும் இப்போராட்டம் நடந்தது.
மாவட்ட கோர்ட் வளா கம் மற்றும் தாலுகா பகுதி கோர்ட்களிலும் வக்கீல்கள் கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இருப்பினும், நீதிபதிகள், அரசு வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றினர்.