sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் மாடு வளர்க்க பயிற்சி

/

 'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் மாடு வளர்க்க பயிற்சி

 'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் மாடு வளர்க்க பயிற்சி

 'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் மாடு வளர்க்க பயிற்சி


ADDED : ஜன 02, 2026 05:36 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தமிழகத்தில் அனைத்து துறை சார்ந்த தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் 'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது.

மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும், அதில் வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், கால்நடை வளர்ப்போருக்கு மட்டுமின்றி, கால்நடை வளர்ப்புக்கு உதவியாக இருந்து, அதையும் ஒரு தொழிலாக செய்வது குறித்த பயிற்சி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் 'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் வழங்கப்படுகிறது.

கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், ஒரு மாத காலம் வரை, 'மாடு வளர்ப்பு உதவியாளர்' பயிற்சி வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல், 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. 6,000 ரூபாய் ஊக்கத் தொகையுடன், சான்றிதழும் வழங்கப்படுகிறது. திட்டத்தின் ஒரு கட்டமாக, திருப்பூர், கால்நடை பல்கலை ஆராய்ச்சி மையத்தில், அடுத்த மாதம் இப்பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுவாக, கால்நடை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு தான், இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்படும் நிலையில், கால்நடை வளர்ப்பில் உதவியாளராக இருக்க விரும்புபவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us