sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வயலில் இறங்கி நாற்று நட்ட 'குட்டீஸ்' பிஞ்சு மனதில் பசுமை விதைக்க முயற்சி

/

வயலில் இறங்கி நாற்று நட்ட 'குட்டீஸ்' பிஞ்சு மனதில் பசுமை விதைக்க முயற்சி

வயலில் இறங்கி நாற்று நட்ட 'குட்டீஸ்' பிஞ்சு மனதில் பசுமை விதைக்க முயற்சி

வயலில் இறங்கி நாற்று நட்ட 'குட்டீஸ்' பிஞ்சு மனதில் பசுமை விதைக்க முயற்சி


ADDED : நவ 23, 2024 11:11 PM

Google News

ADDED : நவ 23, 2024 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'இளமையில் கல்' என்கிறது, ஆத்திச்சூடி. அதுவும், பிஞ்சு மனதில் ஆழப் பதியும் விஷயங்கள், அவர்களின் வளரிளம் பருவத்துக்கும், அதை தாண்டிய வாழ்க்கை பயணத்துக்கு, அஸ்திவாரமாக அமைந்துவிடும்.

அந்த அடிப்படையில், வெள்ளகோவில் ஒன்றியம், சிலம்பகவுண்டன் வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு, ஏட்டுக்கல்வியுடன் வாழ்க்கை கல்வியும் கற்பிக்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, உழவின் முக்கியத்துவம், உழவர்களின் வாழ்க்கை சூழலை, பள்ளிக்குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், வயலில் இறங்கி நாற்று நடும் பயிற்சியை வழங்கினர்.

பள்ளி தலைமையாசிரியர் பிரபாகர் முயற்சியில், பள்ளி மேலாண்மைக்குழுவினர் மற்றும் பெற்றோர் உதவியுடன், அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள வயலில் இறங்கி, பள்ளிக் குழந்தைகளுக்கு நாற்று நடவு கற்றுக் கொடுத்தனர். குழந்தைகளும் உற்சாக துள்ளலுடன் நீர் சூழ்ந்த வயலில் இறங்கி நாற்று நடவு செய்தனர்.






      Dinamalar
      Follow us