sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காட்டுப்பன்றிகளால் சேதம்; கூடுதல் நிவாரணம் தேவை

/

காட்டுப்பன்றிகளால் சேதம்; கூடுதல் நிவாரணம் தேவை

காட்டுப்பன்றிகளால் சேதம்; கூடுதல் நிவாரணம் தேவை

காட்டுப்பன்றிகளால் சேதம்; கூடுதல் நிவாரணம் தேவை


ADDED : அக் 16, 2024 08:57 PM

Google News

ADDED : அக் 16, 2024 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, : சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், வனவிலங்குகளால், ஏற்படும் பயிர் சேதத்துக்கு கூடுதல் நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், நீண்ட கால பயிராக தென்னை, மா சாகுபடி மற்றும் சீசன்களில் மக்காச்சோளம், நிலக்கடலை, மொச்சை உள்ளிட்ட சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது: வனத்திலிருந்து வெளியேறும் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால், அனைத்து வகை சாகுபடியும் பாதிக்கப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

நீண்ட இழுபறிக்குப்பிறகு, குறைந்தளவு தொகையே நிவாரணமாக வழங்குகின்றனர். சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், சொற்ப அளவுக்கு வழங்கும் நிவாரணத்தால் எவ்வித பலனும் இல்லை.

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உள்ளிட்ட துறையினரால், கையகப்படுத்தப்படும் நிலங்களில், இருக்கும் மரங்களை அகற்ற, நிவாரணத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே அளவு தொகையை, வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்த பரிந்துரையை வனத்துறையினர் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us