sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இணைய வசதி பெறுவதில் தாமதம்: அரசு பள்ளிகளில் குழப்பம்

/

 இணைய வசதி பெறுவதில் தாமதம்: அரசு பள்ளிகளில் குழப்பம்

 இணைய வசதி பெறுவதில் தாமதம்: அரசு பள்ளிகளில் குழப்பம்

 இணைய வசதி பெறுவதில் தாமதம்: அரசு பள்ளிகளில் குழப்பம்


ADDED : பிப் 12, 2024 12:17 AM

Google News

ADDED : பிப் 12, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:அரசுப்பள்ளிகளில், இணைய வசதி வழங்குவதற்கான முறையான வழிமுறை இல்லாததால் திட்டம் தாமதமாகிறது.

மாநிலம் முழுவதும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்கும் வகையில், பல்வேறு நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக, அவர்கள் கல்வி கற்பதில் சிறந்து விளங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு துவக்கப்பள்ளிகளில், இணைய வசதி ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக அரசுக்கு, ஆசிரியர்கள், பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக, நடப்பாண்டில் அதற்கான வாய்ப்பு அரசு பள்ளிகளுக்கு கிடைத்துள்ளது.

மாநில அரசின் சார்பில் துவக்கப்பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு இணைய வசதி கட்டாய தேவையாக உள்ளது.

உடுமலை வட்டாரத்துக்குட்பட்ட அரசு துவக்கப்பள்ளிகளில், இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு கல்வித்துறையின் சார்பில் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

பிராட்பேண்ட் வாயிலாக, இணைய வசதி பெற்று அந்த விபரங்களையும் பதிவேற்றம் செய்வதற்கு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தற்போது இணைய வசதி பெறுவதில், பள்ளிகளில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இணைய வசதி வழங்கும் நிறுவனங்கள், பள்ளிகளை பார்வையிட்ட பின்னர், அதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யாமல் உள்ளனர். பள்ளிகல்வித்துறை இணையதளத்தில், இணைய வசதி பெறும் பணிகள் குறித்துதொடர்ந்து பதிவுகள் கேட்கப்படு கின்றன.

இணைய வசதிக்கான முறையான வழிகாட்டுதல் இல்லாததால், ஆசிரியர்களும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து குழப்பத்தில் உள்ளனர்.

எனவே, பள்ளிகளில் இணைய வசதி பெறும் வகையில், உரிய வழிகாட்டுதல்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us