/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
/
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
ADDED : அக் 11, 2025 11:02 PM
திருப்பூர்:புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். நேற்று புரட்டாசி மாத நிறைவு சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளினார். திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவில் வளாகத்தில், பெருமாள் தாசர்களுக்கு, அரிசி, காய்கறிகளை படைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
அதே போல், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர் திருப்பதி கோவில், குருவாயூரப்பன் கோவில், மொண்டிபாளையம் ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில், கருவலுார் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், அவிநாசி, திருமுருகன்பூண்டி மற்றும் சாமளாபுரம் கரிவரதராஜ பெருமாள் கோவில்கள், அவிநாசி காரணப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இக்கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் துளசி மாலை சாற்றியும், தீபம் ஏற்றி வைத்தும் வழிபட்டனர்.