/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவாலயங்களில் பக்தர்கள் குவிந்தனர்
/
சிவாலயங்களில் பக்தர்கள் குவிந்தனர்
ADDED : பிப் 27, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஹா சிவராத்திரியை முன்னிட்டு, திருப்பூர் பகுதி சிவாலயங்களில் பக்தர்கள் குவிந்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த திருப்பூர், தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம், அண்ணாமலை ஈஸ்வரர்; ராயபுரம், ராஜ விநாயகர் கோவிலில், ஜோதிலிங்கர்; வாலிபாளையம், கல்யாண சுப்ரமணியர் கோவிலில், காசிவிஸ்வநாதர்; எஸ்.வி., காலனி, திருநீலகண்டேஸ்வரர்; லட்சுமி நகர், அருணாச்சலேஸ்வரர்; வஞ்சி பாளையம் - முருகம்பாளையம் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலில், ஆதீஸ்வர பெருமான்; திருப்பூர், கருமாரம்பாளையத்தில் உள்ள கருமாரியம்மன் கோவிலில், அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

