நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் வடமாநில வாலிபர் ஒருவர், இரும்பு கம்பியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியபடி சுற்றி திரிந்தார். பயணி ஒருவரையும் தாக்கினார்.
இதை பார்த்த பஸ் டிரைவர்கள், வாலிபரை தடுக்க முயன்ற போது, அவர்களையும் தாக்கினார்.
உடனே, வாலிபரை பிடித்து அனைவரும் தர்ம அடி கொடுத்து, அங்கிருந்த தெற்கு போலீஸ் அவுட் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், சஞ்சித், 33 என்பதும், போதையில் இருந்தது தெரிந்தது.