sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; ஆர்.ஜி.எம்., பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

/

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; ஆர்.ஜி.எம்., பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; ஆர்.ஜி.எம்., பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; ஆர்.ஜி.எம்., பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு


ADDED : நவ 15, 2024 09:38 PM

Google News

ADDED : நவ 15, 2024 09:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற, மெகா வினாடி-வினா போட்டி, உடுமலை ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, பட்டம் இதழ் நாள்தோறும் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை மேம்படுத்தும் வகையில், கடந்த, 2018 முதல் மெகா வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது.

நடப்பாண்டுக்கான வினாடி-வினா போட்டி, 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், உடுமலை ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சி உள்ளது.

பள்ளியில் நடந்த போட்டியில், முதல் சுற்றில், 100 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, எட்டு அணிகளாக பிரித்து இறுதிசுற்று போட்டி நடந்தது.

மூன்று கட்டங்களாக நடந்த போட்டியில், முதல் பரிசை 'ஏ' அணியை சேர்ந்த, பிளஸ் 2 மாணவர் ஹர்ஷன்பாலாஜி, ஆறாம் வகுப்பு மாணவர் வருண்சாய் ஆகியோர் வென்றனர். போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி முதல்வர் சகுந்தலாமணி, ஒருங்கிணைப்பாளர் பாலாமணி, ஆசிரியர்கள் முத்தாத்தாள், கதிஜா ஆகியோர் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.

முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதியில் பங்கேற்பர். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடத்தப்படும்.

ஊக்குவிக்கிறது!


பள்ளி முதல்வர் சகுந்தலாமணி கூறியதாவது:

'பட்டம்' இதழ், மாணவர்களின் உள்ளார்ந்த திறன்களை வெளிப்படுத்துகிறது. அவர்களுக்கான மொழி புலமையை திறம்பட மேம்படுத்தும் வகையில் உள்ளது. நாளிதழ் வாசிக்கும் பழக்கம் இல்லாத மாணவர்கள் கூட, 'பட்டம்' இதழ் படிப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

பட்டத்தில் வழங்கப்படும் புகைப்படங்களை பார்த்தும் மாணவர்கள் ஓவியம் வரைவதற்கான பயிற்சிகளையும் எடுக்கின்றனர்.

அவர்களின் கற்பனை திறன்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.

இவ்வாறு கூறினார்.

சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கிறது!

மாணவர் ஹர்ஷன்பாலாஜி: மாணவர்களுக்கு தேவையான அனைத்தும் 'பட்டம்' இதழில் உள்ளது. பள்ளி படிப்பை முடித்து விட்டு, அடுத்து வரும் உயர்கல்விக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கும் கூட 'பட்டம்' மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சிந்திக்கும் ஆற்றலை ஊக்குவிக்கிறது. மாணவர்களுக்கான ஒரு இதழாக பல்வேறு தகவல்களுடன் இருக்கும் 'பட்டம்', பெற்றோர் மற்றும் ஆசிரியர்களையும் அதிகம் ஈர்க்கும் வகையில் உள்ளது.மாணவர் வருண்சாய்: வாசிப்பதற்கு அனைத்து பகுதிகளும் எளிமையாக இருப்பதுடன், ஆர்வமாகவும் உள்ளது. மாணவர்களுக்கு கவனசிதறல் ஏற்படாத வகையில் சிந்தனையை ஒருநிலைபடுத்துவதற்கும் 'பட்டம்' பயனுள்ளதாக உள்ளது. 'பட்டம்' இதழில் வரும் கேள்வி பதில்கள், படங்கள் அனைத்துமே சிறப்பாக உள்ளது. வினாடி-வினா போட்டியில் அடுத்தகட்டத்திலும் வெற்றி பெற்று பரிசை வெல்வோம்.








      Dinamalar
      Follow us