sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு பள்ளிகள் தயாராக இருந்தும் அமைச்சர் வராததால் ஏமாற்றம்

/

அரசு பள்ளிகள் தயாராக இருந்தும் அமைச்சர் வராததால் ஏமாற்றம்

அரசு பள்ளிகள் தயாராக இருந்தும் அமைச்சர் வராததால் ஏமாற்றம்

அரசு பள்ளிகள் தயாராக இருந்தும் அமைச்சர் வராததால் ஏமாற்றம்


ADDED : ஏப் 23, 2025 12:37 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; மாணவர்களின் வாசிப்புத்திறனில் அரசு பள்ளிகள் தயாராக இருந்தும், அமைச்சர் வருகை இல்லாததால், ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கடந்த ஆண்டு நவ., மாதம், அரசுப்பள்ளி ஒன்றில் மாணவர்களின் வாசிப்புத்திறனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பார்வையிட்டார். அதேபோல், மற்ற அரசுப்பள்ளிகளும், நுாறு சதவீதம் மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த அறிவுறுத்தினார்.

குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து, அப்பள்ளிகளில் நுாறு சதவீதம் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்துவதற்கு உத்தரவிட்டது. மேலும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு நடக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில், ஒவ்வொரு வட்டாரத்திலும் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், பிப்., மாதம் இந்த ஆய்வு நடப்பதாக சுற்றறிக்கை விடப்பட்டது.

ஆனால் எதுவும் நடக்கவில்லை. இறுதியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மட்டுமே, மாணவர்களின் வாசித்தல் திறனை ஆய்வு செய்து வருகின்றனர்.

அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

அரசுப்பள்ளிகளை பார்வையிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வருவதாக முன்பு அறிவிக்கப்பட்டதால், மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளித்தும், ஆவலுடன் காத்திருந்தோம். ஆனால், தற்போது கல்வியாண்டும் நிறைவடைந்துவிட்டது. அமைச்சர் வராததால் ஏமாற்றமடைந்தோம். ஆனாலும் மாணவர்கள் வாசித்தலில் மேம்பட்டுள்ளதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us