/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நோய் தாக்கி பாதித்த தென்னை மரங்கள்: மறு நடவு திட்டம் அறிமுகம்
/
நோய் தாக்கி பாதித்த தென்னை மரங்கள்: மறு நடவு திட்டம் அறிமுகம்
நோய் தாக்கி பாதித்த தென்னை மரங்கள்: மறு நடவு திட்டம் அறிமுகம்
நோய் தாக்கி பாதித்த தென்னை மரங்கள்: மறு நடவு திட்டம் அறிமுகம்
ADDED : அக் 18, 2024 10:25 PM

உடுமலை: மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை துறை சார்பில், தென்னை மறு நடவு திட்டத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது. தென்னந்தோப்புகளுக்கு புத்துயிர் அளிக்க இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் குமார் கூறியதாவது:
மடத்துக்குளம் வட்டாரத்தில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ, 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்னையில் பூச்சி, நோய் தாக்கிய மரங்கள், வயது முதிர்வு காரணமாக, காய்காத மரங்களை வெட்டி அகற்றவும், மறு நடவிற்கு தரமான நாற்றுகளை வழங்கவும், ஒருங்கிணைந்த மேலாண்மை முறை வாயிலாக, மீதமுள்ள மரங்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டவும், தென்னை வளர்ச்சி வாரியதுடன் இணைந்து, தென்னையில் மறுநடவு மற்றும் புனரமைத்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
நடப்பு நிதியாண்டில், தென்னை வளர்ச்சி வாரியம் தென்னை மறு நடவு மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் மடத்துக்குளம் வட்டாரத்தில், 200 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காய்ப்பு திறன் குறைந்த மரங்களை அகற்றி அப்புறப்படுத்த, ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சம் ரூ.32 ஆயிரமும், ஒருங்கிணைத்த மேலாண்மை செய்து தென்னந்தோப்புகளை புதுப்பிக்க, ஒரு ஹெக்டேருக்கு ரூ.8,750- மதிப்பில் உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, ரேஷன் கார்டு நகல் ஆதார் நகல் வங்கிக்கணக்கு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ --2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.
மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன் 96598 38787 ; பூவிகா தேவி 80720 09226 ; பபிதா 85250 25540 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்தார்.

