/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட சைக்கிள் போட்டி அரசு பள்ளி அசத்தல்
/
மாவட்ட சைக்கிள் போட்டி அரசு பள்ளி அசத்தல்
ADDED : அக் 10, 2025 10:18 PM
- நமது நிருபர் -
மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில், 19 வயது பிரிவில், கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது.
பள்ளி மாணவ, மாணவியரின் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், அவ்வப்போது போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், திருப்பூர், கோவில்வழியில், மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது.
பிரன்ட்லைன் பள்ளி முன் போட்டியை, நல்லுார் போலீஸ் உதவி கமிஷனர் தையல்நாயகி துவக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் ஒருங்கிணைத்தார். கோவில் வழி முதல் அமராவதிபாளையம் வரை சைக்கிள் போட்டி நடந்தது. இதில், மாவட்டம் முழுதும் இருந்து, மாணவ, மாணவியர் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்போட்டி பல்வேறு பிரிவுகளாக நடந்தது.
மாணவர்களுக்கான, 14 வயது பிரிவில் கிேஷார் (ஜெயம் வித்யா பவன் மெட்ரிக்) முதலிடம், 17 வயது பிரிவில் ஹரிஷ் (ஆர்.ஜி., மெட்ரிக்), 19 வயது பிரிவில் கிருத்திக் (கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி) முதலிடம் பெற்றனர்.
மாணவியர் 14 வயது பிரிவில், சுவஸ்திகா (இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக்), 17 வயது பிரிவில் மதுஸ்ரீ (கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி), 19 வயது பிரிவில், ஹர்சிதா (இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக்) ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
முதலிடம் பெற்ற, ஆறு பேரும் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.