sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி

/

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி


ADDED : டிச 10, 2024 11:32 PM

Google News

ADDED : டிச 10, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பாரதியார் பிறந்தநாள் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடக்கிறது. திருப்பூர் மாவட்ட அளவில் நீச்சல் போட்டி மூன்று பிரிவுகளில் நடந்தது.

இப்போட்டியில் குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகளில் பங்கேற்றனர்.

அதில் 50மீ, 100மீ, 200மீ, 400மீ ப்ரிஸ்டைல் போட்டிகளிலும், 50மீ, 100மீ, 200மீ பேக் ஸ்ட்ரோக் போட்டிகளிலும், 50 மற்றும் 100 மீ பட்டர்ப்லை பிரிவிலும், 400மீ ரிலே, 400மீ மிட்லே ரிலே போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தமாக 8 தங்கம், 26 வெள்ளி, 7 வெண்கலம் என 41 பதக்கங்களை பெற்றுள்ளனர். தனிநபர் போட்டியில் முதல் இரண்டு இடமும், குழு போட்டியில் முதலிடமும் பெற்ற மாணவர்கள் 2025 ஜன., மாதம் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் விஜய்ராகவன், சலுகாமா, சந்திரபாபு, ஆசிரியர் ரமேஷ், உதவி தலைமையாசிரியர்கள் செந்தில்குமார், தமிழ்செல்வி பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us