sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாவட்ட மாரத்தான் நாளை நடக்கிறது

/

மாவட்ட மாரத்தான் நாளை நடக்கிறது

மாவட்ட மாரத்தான் நாளை நடக்கிறது

மாவட்ட மாரத்தான் நாளை நடக்கிறது


ADDED : நவ 01, 2025 12:23 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மாரத்தான் ஓட்ட போட்டி, திருப்பூரில், நாளை (2ம் தேதி) நடைபெற உள்ளது. சிக்கண்ணா அரசு கல்லுாரியில், காலை, 6:00 மணிக்கு ஓட்டம் துவங்கும். வஞ்சிபாளையம் வரை சென்று, மீண்டும் சிக்கண்ணா கல்லுாரியை வந்தடையும்.

17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., - பெண்களுக்கு 5 கி.மீ., துாரம். 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10; பெண்களுக்கு 5 கி.மீ., துாரத்துக்கு நடத்தப்படுகிறது.

போட்டியில் பங்கேற்போர், கட்டாயம் வயது சான்று கொண்டுவரவேண்டும். பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான சான்றிதழ் கொண்டுவரவேண்டும். ஆதார் கார்டு நகல் வைத்திருக்கவேண்டும்.

மாரத்தானில் வெற்றிபெறுவோருக்கான பரிசு தொகை, அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஆகவே, போட்டியில் பங்கேற்போர், தங்கள் வங்கி பாஸ்புக் நகலை, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

போட்டிக்கு ஒரு மணி நேரம் முன்னரே, போட்டி துவங்கும் இடத்துக்கு வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0421 2244899 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.






      Dinamalar
      Follow us