/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுவர் - சிறுமியருடன் தீபாவளி கொண்டாட்டம்
/
சிறுவர் - சிறுமியருடன் தீபாவளி கொண்டாட்டம்
ADDED : அக் 11, 2025 11:14 PM

திருப்பூர்: என்.எம்.சி.டி. அறக்கட்டளை, நிட் சிட்டி அரிமா சங்கம், சேவா சமிதி ஆகியன இணைந்து எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியருடனான தீபாவளி கொண்டாட்டத்தை, காலேஜ் ரோடு, திருப்பூர் சேவா சமிதி அரங்கில் நடத்தின. சிறுவர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங் கப்பட்டது.
சில மாணவர்களுக்கு உயர் கல்விக்கானகாசோலைகளும் வழங்கப்பட்டன. -என்.எம்.சி.டி. நிர்வாக அறங்காவலர் சங்கர நாராயணன் வரவேற்றார். லயன்ஸ் கவர்னர் நித்யானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஷ் அகமது பாஷா, லயன்ஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மெஜஸ்டிக் கந்தசாமி குழந்தைகள் நல அலகு தலைவர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர். பிரகாஷ் நன்றி கூறினார்.