/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துப்புரவு பணியாளருடன் தீபாவளி கொண்டாட்டம்
/
துப்புரவு பணியாளருடன் தீபாவளி கொண்டாட்டம்
ADDED : அக் 26, 2024 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, 10வது வார்டு கவுன்சிலராக உள்ளவர் பிரேமலதா (தி.மு.க.,); நேற்று ஆத்துபாளையம் கட்சி அலுவலகத்தில் வைத்து, துாய்மை பணியாளர்கள், கொசு மருந்து அடிப்போர், குடிநீர் ஆப்ரேட்டர்கள், குப்பை வண்டி ஓட்டுனர் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு தீபாவளிபரிசுகள் வழங்கினார்.
ஆண்களுக்கு பேன்ட் - சர்ட், பெண்களுக்கு புடவை - ஜாக்கெட் மற்றும் பட்டாசு, இனிப்புகளை வழங்கினார். முன்னதாக, துாய்மை பணியாளர்களுடன் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தீபாவளியை கொண்டாடினர்.