sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீபாவளி இனிப்பு - காரம் சுவையுடன் தரமும் அவசியம்

/

தீபாவளி இனிப்பு - காரம் சுவையுடன் தரமும் அவசியம்

தீபாவளி இனிப்பு - காரம் சுவையுடன் தரமும் அவசியம்

தீபாவளி இனிப்பு - காரம் சுவையுடன் தரமும் அவசியம்


ADDED : அக் 19, 2024 11:52 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீபாவளி என்றால் இனிப்பு இல்லாமலா! இனிப்பு, கார வகை பலகாரங்கள், தின்பண்டங்களை, அன்பு பரிமாற்றத்தின் அடையாளமாக, உறவினர், நண்பர்களுக்கு பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது வழக்கம்.சிதையாத கூட்டுக்குடும்ப வாழ்க்கையில், வீடுகளில் உள்ள பெரியவர்கள், 10, 20 நாட்களுக்கு முன்பே பலவித பலகாரங்கள் செய்ய துவங்கிவிடுவர்.

விதம் விதமான பலகாரங்கள் வீடுகளிலேயே தயாராகும். ஆனால் இன்று, நிலைமை மாறிவிட்டது. பரபரப்பான வாழ்க்கை சூழல் ஒருபுறம், அதிகரித்துவிட்ட தனி குடித்தனங்கள் இன்னொரு புறம் போன்ற காரணங்களால், பலகாரங்களை கடைகளில் 'ஆர்டர்' செய்வது வழக்கத்துக்கு வந்து விட்டது.வாடிக்கையாளர்கள், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய அடுமனைகளை தயார் செய்து வருகின்றனர், இனிப்பு, கார வகை பலகாரம் செய்வோர். அந்த வகையில், 'தங்கள் தயாரிப்புகளை வாங்கி உண்பதால், எவ்வித உடல் உபாதையும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், தயாரிப்பின் தரம் இருக்க வேண்டும்' என, அவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது உணவு பாதுகாப்புத்துறை. கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவில், ரமணாஸ் ஓட்டலில் நடந்த கூட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை, இனிப்பு, காரம் தயாரிப்போருக்கு சில அறிவுரை வழங்கி, துண்டு பிரசுரம் வினியோகித்தார்.

புகார் செய்யலாம்

''உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு புறம்பாக உணவு தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று பெற்றுக் கொள்ளாமல் உணவு வணிகம் செய்வோர் குறித்த தகவலை 0421-2971190, 94440 42322 என்ற எண்ணில் புகாராக தெரிவிக்கலாம். அவ்வாறு, தகவல் தெரிவிப்போர் விபரம், ரகசியம் காக்கப்படும்,'' என்கிறார் உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை.

தரம் நிர்ணயிக்கும் நீரும், நிறமியும்

இனிப்பு, காரம் தயாரிப்போருக்கு உணவு பாதுகாப்புத்துறையின் அறிவுரை:அனைத்து ஸ்வீட், காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும். தயாரிப்பு பகுதி அல்லது சமையலறை போதிய வெளிச்சத்துடன் இருக்க வேண்டும்; இருட்டாக, சுவரில் கரி படிந்திருக்க கூடாது. போதிய புகைபோக்கி இருக்க வேண்டும். தரைத்தளம் உடைந்த நிலையில் பூச்சி, எலிகள் நடமாடும் வகையில் இருக்க கூடாது.உணவு தயாரிப்புக்கு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது, 50 முதல், 100 பிபிஎம் தரமுள்ள நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிமாக செயற்கை நிறமி சேர்க்க கூடாது. நீரும், நிறமியும் உணவின் தரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.உணவு தயாரிப்புக்கான பாத்திரங்கள் சுத்தமாக கழுவி வைத்திருக்க வேண்டும். உணவு சமைக்கும் பணியாளர்கள், தன் சுத்தம் பேண வேண்டும். எளிதில் கழன்று விடக்கூடிய நகை, மோதிரங்களுடன் பணியாற்றக்கூடாது. கையுறை, தலையுறை அணிந்திருக்க வேண்டும். புகைபிடித்தல், எச்சில் துப்புதல் கூடாது. பணியாளர்கள் மருத்துவ தகுதிச்சான்று வைத்திருக்க வேண்டும். தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை உணவு கூடத்திற்குள் அனுமதிக்கக்கூடாது.



எண்ணெய் பயன்பாட்டில் கவனம்

உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள், கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். 'பேக்கிங்' செய்யப்படும் உணவு பொட்டலங்கள் மீது உணவு பொருட்களின் விபரம் அச்சிடப்பட வேண்டும். சில்லரை விற்பனை செய்யப்படும் இனிப்பு, காரம் போன்ற உணவு பொருட்களின் தயாரிப்பு, காலாவதி தேதி காட்சிப்படுத்தப்பட வேண்டும். உணவு பொருள், எண்ணெய் பலகாரங்கள் பரிமாறும் போது, இலை அல்லது தட்டு பயன்படுத்த வேண்டும்; செய்தித்தாள், பாலிதீன் பை பயன்படுத்தக்கூடாது.உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே சூடுபடுத்த வேண்டும். திரும்ப, திரும்ப அதே எண்ணெயில் பதார்த்தங்களை தயாரிக்க கூடாது; அவ்வாறு செய்வது தான் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து, மாரடைப்பு உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு காரணமாகிவிடுகிறது.உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி பெற்ற மேற்பார்வையாளர், கடையில் இருக்க வேண்டும். உணவு தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்கியதற்கான ரசீது பராமரிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று பெறாத உணவு வணிகர்கள் மற்றும் முகவரி தெரியாத உணவு வணிகர்களிடம் உணவு பொருட்களை வாங்க, விற்க கூடாது என, அறிவுரை வழங்கியிருக்கிறது, உணவு பாதுகாப்புத்துறை.



பழங்களை வழங்குங்கள்

திருப்பூர் ரோட்டரி சங்கங்களின் அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன் கூறியதாவது:தீபாவளி கொண்டாட தயாராகி வருகிறோம். அன்பு, பரிமாற்றத்தின் அடையாளமாக இனிப்பு பரிமாறிக் கொள்வது வழக்கம்; இது தவறில்லை. இருப்பினும், அளவுக்கு அதிகமாக இனிப்பு உண்பது, உடலுக்கு ஏற்புடையது அல்ல. எனவே ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற பழங்களை, பரிமாறிக் கொள்ளலாம். பாதாம், பிஸ்தா போன்ற உலர்பழங்களையும் வழங்கலாம்; இவை உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. புத்தகங்களை கூட பரிசாக வழங்கலாம்.பொதுமக்களின் பங்களிப்பு தொகையுடன் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை அன்பு பரிமாற்றத்தின் அடையாளமாக, தங்களால் இயன்ற தொகையை வழங்கலாம்.








      Dinamalar
      Follow us