sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீபாவளி சீட்டு மோசடி ஏமாந்தவர்கள் மறியல்

/

தீபாவளி சீட்டு மோசடி ஏமாந்தவர்கள் மறியல்

தீபாவளி சீட்டு மோசடி ஏமாந்தவர்கள் மறியல்

தீபாவளி சீட்டு மோசடி ஏமாந்தவர்கள் மறியல்

3


ADDED : அக் 19, 2024 06:28 AM

Google News

ADDED : அக் 19, 2024 06:28 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : திருப்பூரில் தீபாவளி சீட்டு நடத்தி, தலைமறைவானவரை கண்டுபிடிக்க கோரி, பணம் செலுத்தியவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், மண்ணரை, சத்யா காலனியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 45. கருமாரம்பாளையத்தில், 'ஸ்ரீ பரமேஸ்வரா சிட்ஸ்' என்ற சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். வாரந்தோறும், 200 ரூபாய் செலுத்தினால், தீபாவளியின் போது, வட்டியுடன் முதிர்வு தொகை, தீபாவளி பரிசு, பலகாரம் போன்றவை வழங்கப்படுவதாக அறிவித்தார். ஈரோடு, குமாரபாளையம் மற்றும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தினர்.

தீபாவளி நெருங்குவதால், முதிர்வு தொகை கேட்டு, நேற்று முன்தினம் மாலை பலரும் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு செந்தில்குமார் இல்லை. மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, சீட்டு செலுத்தியவர்கள் நேற்று காலை அவரது அலுவலகம் முன், ஊத்துக்குளி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்து தீர்வு காணுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

ஏமாந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,


நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஒருவரும், அவரது மனைவியும் சீட்டு போட்டுள்ளதோடு, 600 பேரை இத்திட்டத்தில் இணைத்துள்ளனர். 'இரண்டாண்டாக முதிர்வு தொகையை முறையாக அளித்தார். எங்களை நம்பி பணம் செலுத்தியோருக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை' என தம்பதியர் அதிர்ச்சியில் உள்ளனர். திருப்பூர் பனியன் நிறுவன ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் பலரும் இத்திட்டத்தில் பணம் செலுத்தியுள்ளனர். சிலருக்கு தேதி குறிப்பிடாமல் காசோலை வழங்கியுள்ளார்.






      Dinamalar
      Follow us