sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ரூ.25.64 லட்சம் கையாடல் மருத்துவர், 'மாஜி' ஊழியர் சிக்கினர்

/

 ரூ.25.64 லட்சம் கையாடல் மருத்துவர், 'மாஜி' ஊழியர் சிக்கினர்

 ரூ.25.64 லட்சம் கையாடல் மருத்துவர், 'மாஜி' ஊழியர் சிக்கினர்

 ரூ.25.64 லட்சம் கையாடல் மருத்துவர், 'மாஜி' ஊழியர் சிக்கினர்


ADDED : பிப் 26, 2026 07:02 AM

Google News

ADDED : பிப் 26, 2026 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: போலி பில்கள் வாயிலாக, அரசு நிதி, 25.64 லட்சம் ரூபாய் கையாடல் செய்த அரசு டாக்டர் உட்பட, இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டார அரசு மருத்துவ அலுவலராக பணிபுரிபவர் டாக்டர் விஜயலட்சுமி, 59. இவர், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான நிதியை கையாடல் செய்ததாகவும், அதற்கு, அங்கு பணி செய்த முன்னாள் பெண் ஊழியர் சிவசெல்வி உடந்தையாக இருந்ததாகவும் புகார் எழுந்தது.

திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். அதில் 25 லட்சத்து, 64,000 ரூபாயை இருவரும், கையாடல் செய்தது தெரிந்தது. அதையடுத்து, விஜயலட்சுமி, சிவசெல்வி மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

போலீசார் கூறுகையில், 'மருத்துவ உபகரணங்கள், தண்ணீர் டேங்க் பராமரிப்பு உள்ளிட்ட வகைகளில், 25.64 லட்சம் ரூபாயை போலி பில்கள் வாயிலாக கையாடல் செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.






      Dinamalar
      Follow us