sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாளை போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறக்காதீங்க!

/

நாளை போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறக்காதீங்க!

நாளை போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறக்காதீங்க!

நாளை போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறக்காதீங்க!


ADDED : மார் 01, 2024 11:15 PM

Google News

ADDED : மார் 01, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், கிராமப்புறங்களில் 895 மையங்கள்; நகர்ப்புறங்களில் 259 மையங்கள் என, மொத்தம் 1,154 மையங்களில், நாளை (3ம் தேதி) போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளி, ஊராட்சி அலுவலகங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட், டோல்கேட் ஆகிய இடங்களிலும் சொட்டுமருந்து வழங்கப்பட உள்ளது.

பஸ் ஸ்டாண்டுகளில் சொட்டு மருந்து வழங்க 26 நடமாடும் குழுக்கள்; ரயில்வே ஸ்டேஷன்களில் வழங்க, 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறும் முகாமில், ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து வழங்கப்படும்.

பல்வேறு துறை சார்ந்த, 4,616 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாவட்டம் முழுவதும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 1.98 லட்சம் பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை எத்தனை முறை சொட்டு மருந்து அளித்திருந்தாலும், நாளை (3ம் தேதி) நடைபெறும் முகாமில், கூடுதல் தவணையாக சொட்டுமருந்து அளித்து, குழந்தைகளை போலியோவிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

இத்தகவலை, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி


கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் என, 1,088 கிராமப்புற மையங்கள், 497 நகர்ப்புற மையங்கள் என, 1,585 மையங்கள் மற்றும் நடமாடும் குழுக்கள் மூலமாக, நாளை (3ம் தேதி) காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும். 31 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவையான சொட்டு மருந்து தயாராக வைக்கப்பட்டிருக்கிறது.

இப்பணியில் சுகாதாரத் துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த பணியாளர்கள் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us