sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கனவு இல்லம் - வீடு பழுது பார்த்தல் ரூ.4.57 கோடி மதிப்பில் பணி ஆணை

/

கனவு இல்லம் - வீடு பழுது பார்த்தல் ரூ.4.57 கோடி மதிப்பில் பணி ஆணை

கனவு இல்லம் - வீடு பழுது பார்த்தல் ரூ.4.57 கோடி மதிப்பில் பணி ஆணை

கனவு இல்லம் - வீடு பழுது பார்த்தல் ரூ.4.57 கோடி மதிப்பில் பணி ஆணை


ADDED : மே 09, 2025 06:40 AM

Google News

ADDED : மே 09, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, பெருமாநல்லுார் லட்சுமி மஹாலில் நேற்று நடைபெற்றது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமைவகித்தார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் சாமிநாதன், அவிநாசி, திருப்பூர், ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட 157 பயனாளிகளுக்கு, 4.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்ட பணிகளுக்கான ஆணை வழங்கினார்.

அதன்பின், அமைச்சர் பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், 1,411 பயனாளிகளுக்கு, 49.38 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தில், 2,093 பயனாளிகளுக்கு, 15.30 கோடி ரூபாய் என, மொத்தம் 3,504 பயனாளிகளுக்கு, 64.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

கடந்த ஏப்., மாதம், 1,211 பயனாளிகளுக்கு, 36.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி ஆணை வழங்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, திருப்பூர், அவிநாசி, ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 157 பயனாளிகளுக்கு, 4.57 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தாராபுரம், குடிமங்கலம், காங்கயம், குண்டடம், மூலனுார், பல்லடம், பொங்கலுார், உடுமலை, வெள்ளகோவிலில் பயனாளிகளுக்கு, கனவு இல்லம், வீடுகள் பழுது பார்த்தலுக்கான ஆணை வழங்கப்பட உள்ளது. பயனாளிகள் தங்கள் வீட்டை பராமரிப்பு செய்து, நீண் நாட்களுக்கு பயன்படுத்தவேண்டும்.

இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) சரவணன், பி.டி.ஓ.,க்கள் ரமேஷ், விஜயகுமார், விமலாவதி உள்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us