sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாக்கடை கால்வாயில் கலந்து குடிநீர் வீண்

/

சாக்கடை கால்வாயில் கலந்து குடிநீர் வீண்

சாக்கடை கால்வாயில் கலந்து குடிநீர் வீண்

சாக்கடை கால்வாயில் கலந்து குடிநீர் வீண்


ADDED : அக் 07, 2025 01:13 AM

Google News

ADDED : அக் 07, 2025 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், குமார் நகரில் இருந்து வளையன்காடு செல்லும் பிரதான ரோட்டில், நான்காவது குடிநீர் திட்ட குழாயில் இருந்து காலை, 10:00 மணி முதல் குடிநீர் வெளியேறி சாக்கடை கால்வாயில் கலந்து வருகிறது. எட்டு மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக சாக்கடையில் பெருக்கெடுத்து வருகிறது. குடிநீருக்காக மக்கள் சிரமப்படும் சூழலில், யாருக்கும் பயனில்லாமல் வீணாக சாக்கடையில் சென்று வருவது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் தகவல் அளித்தனர். ஆனால், மாலை, 6:00 மணி வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து, குடிநீர் வெளியேறி வருகிறது.

இதுதொடர்பாக, 27வது வார்டு கவுன்சிலர் ரவிசந்திரனிடம் கேட்டதற்கு, ''நான்காவது குடிநீர் திட்டத்தில் ஒவ்வொரு பகுதியில் சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில், சோதனையின் அடிப்படையில், குடிநீர் வெளியேறி இருக்கும். இதுகுறித்து அதிகாரியிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. உடனடியாக நிறுத்தப்படும் என்று தெரிவித்தனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us