sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோடையில் வீணாகுது குடிநீர்... சாக்கடை கால்வாயில் பொங்குது கழிவுநீர்!

/

கோடையில் வீணாகுது குடிநீர்... சாக்கடை கால்வாயில் பொங்குது கழிவுநீர்!

கோடையில் வீணாகுது குடிநீர்... சாக்கடை கால்வாயில் பொங்குது கழிவுநீர்!

கோடையில் வீணாகுது குடிநீர்... சாக்கடை கால்வாயில் பொங்குது கழிவுநீர்!


ADDED : மார் 12, 2024 01:53 AM

Google News

ADDED : மார் 12, 2024 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி சுவரில் விரிசல்

பல்லடம் உழவர் சந்தை அருகே உள்ள அரசு பள்ளி சுவர் விரிசல் ஏற்பட்டு, எப்போது வேண்டுமானலும் விழும் நிலையில் உள்ளது. பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.

- சேகர், பல்லடம்.

வீணாகும் தண்ணீர்

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி அருகே, மிஷின் வீதி சந்திப்பில், குழாய் உடைந்து தண்ணீர் ஒரு மாதமாக வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- தினேஷ்குமார், மிஷின் வீதி. (படம் உண்டு)

திருப்பூர், அவிநாசி ரோடு, அம்மாபாளையம் வளைவில், குழாய் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து, நாள் முழுதும் வீணாகிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

- இளமாறன், அம்மாபாளையம். (படம் உண்டு)

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, இரண்டாவது ரயில்வே கேட் ஸ்டாப்பில், கேட்வால்வு பழுதாகி, தண்ணீர் வீணாகிறது. சாலை குழியாகி விட்டது. சரிசெய்ய வேண்டும்.

- காந்திமதி, கே.பி.என்., காலனி. (படம் உண்டு)

காற்றில் மாசு

சேவூர் - போத்தம்பாளையம் ரோட்டில், பழைய பொருட்களை சேகரிக்க குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. அப்பகுதி முழுதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்து, காற்று மாசு ஏற்படுகிறது.

- சுப்ரமணி, சேவூர். (படம் உண்டு)

நாய்த்தொல்லை

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. மாநகராட்சி மூலம் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.

- மகாலிங்கம், ஸ்டேட் பாங்க் காலனி. (படம் உண்டு)

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை சென்னியப்பா நகரில் கழிவுநீர் குழாய்களை சரிவர பதிக்காமல், அப்படியே ரோடு போட்டுள்ளனர். ரோட்டுக்கு மேல் கழிவுநீர் வெளியேறி வருகிறது.

- ஹரிஷ், சென்னியப்பா நகர். (படம் உண்டு)

கால்வாய் கட்டுங்க!

திருப்பூர், 57 வது வார்டு, ஜோதி நகரில் சாக்கடை கால்வாய் வசதியில்லை. கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- சத்தியசீலன், ஜோதி நகர். (படம் உண்டு)

இடையூறாக லாரிகள்

திருப்பூர், எஸ்.பெரியபாளையம் மாடர்ன் சிட்டி, வெற்றிவேல் நகர் குடியிருப்போர் காலனி செல்லும் வழியில் லாரிகள் இடையூறாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

- ரங்கசாமி, வெற்றிவேல்நகர். (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

திருப்பூர், அனுப்பர்பாளையம் புதுார், வேலம்பாளையம் ரிங்ரோட்டில், கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.

- தங்கவேல், அனுப்பர்பாளையம்புதுார். (படம் உண்டு)

திருப்பூர், பார்க்ரோட்டில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளது.

- வின்சென்ட்ராஜ், ராயபுரம். (படம் உண்டு)

திருப்பூர், டீச்சர்ஸ் காலனி, மூன்றாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் அப்படியே தேங்கி நிற்கிறது.

- ராஜேஸ்வரி, டீச்சர்ஸ்காலனி.

குப்பை தேக்கம்

திருப்பூர், 27 வது வார்டு, வலையங்காடு, மாகாளியம்மன் கோவில் முன் மரத்தின் இலைகள் குப்பையாக குவிந்துள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.

- ராம்குமார், வலையங்காடு. (படம் உண்டு)

செந்நீராக குடிநீர்

கொடுவாய் பகுதியில் வினியோகிக்கப்படும் அத்திக்கடவு திட்ட குடிநீருடன் மழைநீர் கலந்து செந்நீராக வினியோகமாகிறது. மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

- பரணிதரன், கொடுவாய். (படம் உண்டு)

குடிநீர் தாமதம்

திருப்பூர், முதலிபாளையம் ஊராட்சி பகுதிக்கு, 20 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குடிநீரின்றி மக்கள் பெருத்த சிரமம் அடைகின்றனர்.

- பாஸ்கர், முதலிபாளையம்.






      Dinamalar
      Follow us