sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நெல்லை காய வைக்க உலர்களம் தேவை

/

நெல்லை காய வைக்க உலர்களம் தேவை

நெல்லை காய வைக்க உலர்களம் தேவை

நெல்லை காய வைக்க உலர்களம் தேவை


ADDED : நவ 04, 2024 09:36 PM

Google News

ADDED : நவ 04, 2024 09:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை ; கல்லாபுரத்தில், உலர்களம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

உடுமலை அருகே கல்லாபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில், அமராவதி அணை பாசனத்தின் வாயிலாக, நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது.

சீசன் சமயங்களில், அரசு கொள்முதல் மையம் அமைக்கப்படுவதில்லை. எனவே, நெல்லை உலர வைத்து, வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது.

ஆனால், அப்பகுதியில், போதிய உலர்கள வசதியில்லை. விளைநிலங்களிலுள்ள சிறு பாறைகள் மற்றும் இணைப்பு ரோடு, பாலங்களில், நெல்லை காய வைக்க வேண்டிய நிலையில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.

கல்லாபுரத்தில், நெல்லை காய வைக்க உலர்களமும், இருப்பு வைக்க குடோன் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், எந்த அரசுத்துறையினரும் நடவடிக்கை எடுக்காமல், கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதி விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us