sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எட்டாக்கனியான அத்திக்கடவு குடிநீர்

/

எட்டாக்கனியான அத்திக்கடவு குடிநீர்

எட்டாக்கனியான அத்திக்கடவு குடிநீர்

எட்டாக்கனியான அத்திக்கடவு குடிநீர்


ADDED : ஜூலை 13, 2025 01:20 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுா : பொங்கலுார் வட்டாரத்தில் கோடை மழை கை கொடுக்கவில்லை. இதனால் பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம் நடைபெற்ற பகுதிகளை தவிர பிற பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஊராட்சி நிர்வாகங்கள் நிலத்தடி நீரை முடிந்த அளவு வினியோகித்து வருகின்றன. ஆனால், அது போதுமானதாக இல்லை. பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். நிலத்தடி நீர் போக அத்திக்கடவு குடிநீர் பொங்கலுார் பகுதிக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது பொங்கலுார் மேற்கு பகுதி வரை கிடைக்கும் அத்திக்கடவு குடிநீர் கிழக்குப் பகுதிக்கு வருவதில்லை.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் திணறி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us