/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏலச்சீட்டு நடத்தி ரூ.ஒரு கோடி மோசடி; முதியவர் கைது
/
ஏலச்சீட்டு நடத்தி ரூ.ஒரு கோடி மோசடி; முதியவர் கைது
ஏலச்சீட்டு நடத்தி ரூ.ஒரு கோடி மோசடி; முதியவர் கைது
ஏலச்சீட்டு நடத்தி ரூ.ஒரு கோடி மோசடி; முதியவர் கைது
ADDED : நவ 27, 2024 03:34 AM

திருப்பூர்; திருப்பூர், காங்கயம் ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன், 62. இவர் திருப்பூர் அரிசிக் கடை வீதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் சீட்டு மற்றும் பைனான்ஸ் நிறுவனம் நடத்தினார். அவரிடம், பொதுமக்கள் பலரும் பணம் செலுத்தி வந்தனர்.
அவ்வகையில், 50க்கும் மேற்பட்டோரிடம், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூல் செய்திருந்தனர். சீட்டு முதிர்வு ஏற்பட்ட பின்பும், பணத்தை தராமல் காலம் கடத்தி வந்தனர்.
பணத்தை தராமல் தலைமறைவாகினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். கமிஷனர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான நபரை போலீசார் தேடி வந்த நிலையில், ராஜேந்திரனை போலீசார் நேற்று கைது செய்தனர். இவ்வழக்கில், தலைமறைவாக உள்ள மேலும், ஒருவரை தேடி வருகின்றனர்.